Saturday, February 28, 2009

எம் தேசத்து மக்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்...!!

அன்புள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு!

கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்.

அங்கே இருக்கும் மாதிரிக் கடிதத்தைப் படியுங்கள்.

உங்கள் மனதுக்கும், அறிவுக்கும் அது நியாயமாகத் தெரிந்தால் மேற்படி
என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

நான் யாரையும் வற்புறுத்தவில்லை;

என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது பிச்சையல்ல கேட்டு வாங்க.
அது ஜனநாயக சமுதாயத்திலிருக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் , மொழிக்கும்
உரியது. ஆனால் எமது தமிழ் ஈழ மக்கள் கடந்த அரை நூற்றாண்டாக அந்தச் சுதந்திரத்தை
அனுபவிக்க முடியாமல் ஒடுக்கப்படுவதையும், அழிக்கப்படுவதையும் உலகம் வேடிக்கை
பார்த்துக் கொண்டு தானிருக்கிறது. தமது சொந்த அரசியலுக்காகவும், வல்லரசுத்
தன்மையை நிலை நாட்டவும் அக்கறை காட்டுவதாக பாசாங்கு செய்து கொண்டு எம்மை அழிக்க ஆயுத விநியோகமும் செய்து கொண்டிருக்கின்றன சில பிற தேசங்கள்.

எம்முடைய தமிழ் ஈழத்தின் உதயத்தைக் காண எமது சந்ததிகளையாவது காப்பாற்ற வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். எமது மக்கள் எம் தேசத்தில் கொல்லப்படுவதை தடுக்கும் படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதற்கான முயற்சி இது. சிறு துளி பெரு வெள்ளமாகி எமது தமிழ் மக்களைக் கொல்லும் அரக்கர்களின் கைகளைத் தடுக்கும் சக்தியை உலகத் தலைவர்களிடம் வழங்க விருப்பமுள்ளவர்கள் உங்கள் பங்களிப்பை அங்கே தாருங்கள்.

http://www.congressweb.com/entry.cfm?orgcode=pearl&hotissue=21



glitter-graphics.com

No comments: