Sunday, March 1, 2009

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும்....!

எம் இனத்தை கொடூரமாக மிருகத்தனமாக கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசின் பொருளாதாரத்தை வீழ்த்தும் முக்கிய பொறுப்பை எமது போராட்டத்தின் ஒரு முக்கிய ராஜதந்திரமாக கருத வேண்டும். இந்த போராட்டத்தில் முக்கிய போராளிகளாக புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் தான் பங்கேற்க வேண்டும். சிறிலங்காவின் சிங்களத் தயாரிப்புகளை பகிஷ்கரித்து அவர்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு அத்திவாரமிடுவோம்.
எமது மண்ணின் மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவத்திற்கு கூலி கொடுக்க எமது பணத்திலேயே பங்கு போடுகிறது இலங்கை அரசு. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஆகவே ஈழத்தமிழர்களாகிய நாம் எமது சகோதர சகோதரிகளை கொன்று குவிக்கும் மிருகத்தனமான சிறிலங்கா அரசின் பொருளாதாரத்தைச் சரியச் செய்யும் போராட்டத்தை இந்தக் கணத்திலிருந்து தொடங்குவோம். சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்போம்.

அத்துடன் எம் இனத்தின் உண்மையான நிலையையும் எமது போராட்டத்தையும் மறுதலிக்கும் ஊடகங்களான சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, பத்திரிகைகளான இந்து, தினமலர், துக்ளக் போன்றவற்றையும் இந்த வினாடியிலிருந்து நான் புறக்கணிப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்வோம்! எம் இனத்து சகோதர சகோதரிகளை பயங்கரவாதிகளாகவும் எமது போராட்டத்தை விஷமத்தனமாகவும் சித்தரிக்கும் எவரும், எதுவும் எம்முடைய எதிரிகளாக எடுத்துக் கொள்வோம். !











1 comment:

soorya said...

தங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன்.
தங்களுடன் இதுபற்றிப் பேச ஆவல்
sooryavinothan@gmail.com
ஆட்சேபம் இல்லையெனில் தனி மடலிடுக. பேசுவோம்.